brand logo
BestWeb.LK 2024 logo
யாழில் புற்றுநோயால் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

யாழில் புற்றுநோயால் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

02 March 2023 | 𝐒𝐚𝐬𝐢𝐝𝐚𝐫𝐚𝐧

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.


வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


புற்றுநோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியில் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததுடன், இவருக்கு நான்கு மாதங்களேயான பெண் குழந்தையொன்றும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You may also like