brand logo

எம்மைப் பற்றி

'தமிழன்' செய்தி இணையத்தளமானது கடந்த 2019 பெப்ரவரி 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. முதலில் இணைய செய்தித்தளமாக இயங்கிய 'தமிழன்' இணையத்தளமானது தற்போது அச்சு ஊடகமாக பத்திரிகை வடிவிலும் வெளியாகி வருகிறது.

தமிழ் பேசும் மக்களின் கருத்துரிமைக் காவலனாகவும் உலக வாழ் தமிழர்களின் நம்பகமான செய்தித் தளமாக 'தமிழன்' இணையத்தளம் தற்போது அதன் சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது.

லிபர்ட்டி பப்ளிஷர்ஸ் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்திலிருந்து ஊடகத்துறையில் அனுபவமிக்க , சிறந்த செய்தியாளர்களின் ஊடாக தமிழன் இணையத்தளம் இயங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவரும் உள்ள எமது பிராந்திய செய்தியாளர்களின் உதவியுடன் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகின்றோம். அத்தோடு, உள்நாட்டுச் செய்திகளையும் சர்வதேசம், விளையாட்டு, சோதிடம், தொழில்நுட்பம், சினிமா போன்ற இதர செய்திகளையும் உடனுக்குடன் வாசகர்களின் கரங்களுக்கு கொண்டு சேர்க்கிறோம்.

தமிழன் பத்திரிகை தற்போது மின்னிதழாகவும் (epaper.thamilan.lk) வெளிவருவதன் காரணமாக எமது தளத்திற்கு சென்று மின்னிதழையும் பார்வையிடும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 'தமிழன்' இணைய செய்தி வாசகர்கள் வழங்கிவரும் ஆதரவுடன் இன்னும் பல ஆண்டுகளுக்கு 'தமிழன்' தலைநிமிர்ந்து பயணிக்க காத்திருக்கிறது.

லிபர்ட்டி பப்ளிஷர்ஸ் நிறுவனத்தின் ஊடாக எமது தமிழன் குழுமமானது 'தமிழன்' தினசரி, தமிழன் வாரவெளியீடு, சிறுவர்களுக்கான 'ஜூனியர் தமிழன்', 'தமிழ் முரசு', இளைஞர்களுக்கான 'கிக்', விவாஹா ஆகிய பத்திரிகைகளை அச்சுப் பதிப்பாக வெளியிட்டு வருகிறது.

A Premium News Experience

பத்திரிகை செய்திகள் உங்கள் விரல் நுனியில்

Over 15k subscribed users!