சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவுக்கு விளக்கமறியல்
17 May 2023 | T.Yuwaraj
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவுக்கு விளக்கமறியல்
17 May 2023 | T.Yuwaraj
மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் 11 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பௌத்த பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதான பிக்கு இன்றைய தினம் கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சிறுமி 36 வயதான தமது தாயுடன் கல்கிசை பகுதியிலுள்ள சொகுசு மாடி கட்டடத்தில் இருந்த போது அங்கு சென்ற 62 வயதான பிக்கு, குறித்த சிறுமியின் தாயாருக்கு போதைப்பொருளை வழங்கி அவரை மயக்கமடைய செய்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த 11 வயதான சிறுமியை பிக்கு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.