கம்பளையில் ATM இயந்திரம் கொள்ளை
2 months ago | T.Yuwaraj
Share on
கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் குறிப்பிடப்படாத தொகையொன்றை திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (24) இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முகமூடி அணிந்த 4 பேர் வேனில் இருந்து வந்து காவலாளியை கட்டி வைத்துவிட்டு ATM இயந்திரத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.