brand logo
கல்வியமைச்சியின் முக்கிய அறிவிப்பு

கல்வியமைச்சியின் முக்கிய அறிவிப்பு

02 June 2023

நாட்டில் 2021 டிசம்பர் 31ஆம் திகதி தமது சேவைக் காலத்தை நிறைவு செய்த மற்றும் இடமாற்றத்துக்கான கடிதம் கிடைத்த அனைத்து ஆசிரியர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி ஆகும் போது, தமது பணி இடத்துக்கு அறிக்கையிட வேண்டும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

 

ஏதேனும் ஒரு ஆசிரியர், மேன்முறையீட்டை முன்வைக்க வேண்டுமாயின், சேவைக்கு அறிக்கையிட்டப் பின்னர் குறித்த பாடசாலை அதிபர் ஊடாக ஆசிரியர் இடமாற்றப் பிரிவுக்கு மேன்முறையீட்டை சமர்ப்பிக்கலாம் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

 

சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், இதற்காக கல்வி அமைச்சின், ஆசிரியர் இடமாற்றப் பிரிவுக்கு சமூகமளிக்க அவசியமில்லை.

 

மேன்முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்தான, தீர்மானங்கள் விரைவில் அறியத்தரப்படும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


You may also like