கை, வாய் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
7 days ago | T.Yuwaraj
Share on
கந்தானை வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டில் குறித்த நபர் தனியாக வசித்து வந்தமை பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் மகள் நேற்று தனது தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸில் மகள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இறந்தவரின் கைகள் கட்டப்பட்டு வாயை மூடும் வகையில் துணி கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போதைய விசாரணைகளின்படி இந்த கொலைச் சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.