brand logo
BestWeb.LK 2024 logo
ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் – சி.ஐ.டி தீவிர விசாரணை

ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் – சி.ஐ.டி தீவிர விசாரணை

28 February 2023 | T.Yuwaraj

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அரசியல் கட்சியொன்றுடன்  தொடர்புடைய குழுவொன்று, சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றில் இந்த கொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இதன்படி இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சி செயற்பாட்டாளர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You may also like