7 சப்ரகமுவ பல்கலை. மாணவர்கள் கைது
12 February 2024
7 சப்ரகமுவ பல்கலை. மாணவர்கள் கைது
12 February 2024
மூன்று மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்கள் சமனலவெவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவரும் மூன்று மாணவர்கள் கடந்த 9 ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலையடுத்து, தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் குறித்த ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான இரண்டு மாணவர்களும் மாணவி ஒருவரும் தொடர்ந்தும் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.