அராலி கிழக்கில் வீடு தீக்கிரை
02 April 2024
அராலி கிழக்கில் வீடு தீக்கிரை
02 April 2024
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு பகுதியில் வீடு ஒன்று நேற்றையதினம் தீயில் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் எதிர்பாராத நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் என்ன என இதுவரை தெரியவரவில்லை.
உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இருப்பினும் வீட்டில் உள்ள சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.