brand logo
ஒரே நாளில் நான்கு முறை திருடிய நபர் (CCTV)

ஒரே நாளில் நான்கு முறை திருடிய நபர் (CCTV)

4 months ago | - 𝐒𝐚𝐬𝐢𝐝𝐚𝐫𝐚𝐧

Share on

மத்துகம-யட்டதொலவத்த பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு வந்த நபரொருவர், அங்கிருந்த பிஸ்கட், பால்மா போன்ற பொருட்களை திருடி தனது உடமையில் மறைத்து வைத்திருந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.


ஒரே நாளில் 4 மணி நேரத்தில், சம்பந்தப்பட்ட நபர் நான்கு முறை வந்து பொருட்களை திருடியுள்ளதோடு, இரண்டு முறை சிறு குழந்தையுடன் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You may also like