brand logo
இரத்தக்கசிவு ஏற்படும் வரை மாணவனை தாக்கிய சக மாணவர்கள்

இரத்தக்கசிவு ஏற்படும் வரை மாணவனை தாக்கிய சக மாணவர்கள்

02 June 2023 | Saranyaa Sri

பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் இம்முறை பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவன் ஒருவனை சக மாணவர்கள் இணைந்து தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில், தாக்குதல் நடத்திய ஐந்து மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இன்றைய அறிவியல் பாடத்தின் முதலாம் நேர இடைவேளையின் போது குறித்த தாக்குதலுக்குள்ளான மாணவன் படித்துக் கொண்டிருந்த போது 5 மாணவர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, சக மாணவர்கள் சேர்ந்து குறித்த மாணவனின் வயிற்றின் கீழ் பகுதியில் உதைத்து சிறுநீரில் இருந்து இரத்தம் வெளியேறும் வரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இதையடுத்து, குறித்த மாணவன், பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் ஒருவர் களுத்துறை வலய கல்வி அலுவலகத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய, தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கர நாவுல்லா தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.



You may also like