brand logo
கோர விபத்தில் சிக்கிய கோரமண்டல் ரயில் : 300 பேர் காயம்

கோர விபத்தில் சிக்கிய கோரமண்டல் ரயில் : 300 பேர் காயம்

02 June 2023 | Saranyaa Sri

கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் இன்று இரவு சுமார் 7 மணியளவில் விபத்துள்ளாகியுள்ளது.


குறித்த ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துள்ளானது. 


இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. 


மீட்பு படையினர் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்றடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விபத்து நிவாரண ரயில் விரைந்துள்ளதாக தென் கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


இதுவரையில் , 300 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 22 பேர் அடங்கிய தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



You may also like