brand logo
வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி

29 April 2024

புத்தளம் - அநுராதபுரம் ஏ-12 வீதியில் பண்டுலுகம பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அநுராதபுரம், பண்டுலுகம பகுதியைச் சேர்ந்த கே.எம்.சமிந்த லால் ( வயது 43) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தனியார் பஸ் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ரஸீன் ரஸ்மின்


You may also like