brand logo
BestWeb.LK 2024 logo
புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நியாயமானது - அமெரிக்க ஜனாதிபதி

புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நியாயமானது - அமெரிக்க ஜனாதிபதி

18 March 2023 | Saranyaa Sri

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகின்றது. 


குறிப்பாக உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய ஜனாதிபதி புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. 


இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், போர்க் குற்றத்தைப் புரிந்ததாக கூறி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 


புதினின் கைது வாரண்ட் உத்தரவுக்கு உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், புதினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது தான் என்று கருத்து தெரிவித்துள்ளார். 


இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவிக்கையில் ,


' உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதற்காக போர்க்குற்றம் செய்ததாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது நியாயமானது. இந்த நடவடிக்கை மிகவும் வலுவான கருத்தை உருவாக்குகிறது' என்று தெரிவித்துள்ளார்.



You may also like