brand logo
இளைஞன் கொலை - சந்தேகநபர் ஒருவர் கைது

இளைஞன் கொலை - சந்தேகநபர் ஒருவர் கைது

16 April 2024 | k.yoshiya

ஹக்மன கொங்கல பிரதேசத்தில் கடந்த 14ஆம் திகதி இரவு இளைஞன் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றுவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் நேற்று (15) மாலை கிரிந்த கல்கந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்தனர்.


ஹக்மன கொங்கல மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த செனரத் ரத்நாயக்க விராஜ் பியூமல் என்பவர் இருபத்தி ஒரு வயதான இளைஞனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றுள்ளார்.


கைது செய்யப்பட்ட நாற்பத்தாறு வயதுடைய சந்தேக நபர், கொங்கல மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்ப உறவினர் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (16) டீயெந்தர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



You may also like