brand logo
ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் - அனுரகுமாரவுக்குமிடையில் சந்திப்பு

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் - அனுரகுமாரவுக்குமிடையில் சந்திப்பு

09 May 2024

 

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆன்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

 

இன்று (09) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 

இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் பெட்ரிக் மெகார்த்தி (Patrick McCarthy), சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான பகுப்பாய்வாளர் நெத்மினி மெதவல மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் நடப்பு மனித உரிமைகளின் நிலைமை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயன்முறை பற்றி இரு தரப்புக்கும் இடையில் விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

 

குறிப்பாக இலங்கையில் நல்லிணக்க செயன்முறையை உன்னிப்பாக அவதானிப்பதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எதிர்வரும் தேர்தல் செயன்முறைக்குள் அரசியல் கட்சிகளால் பின்பற்றபட வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தினர்.

 

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கலாசாரமானது தொடக்கத்தில் இருந்தே ஒழுக்கநெறிக் கோவையை அடிப்படையாகக் கொண்டிருந்ததென்பதை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கு வலியுறுத்தியதோடு, அவர்களால் முன்மொழியப்பட்ட பிரேரணைகளுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தெரிவித்தாக . அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.



You may also like