brand logo
அஹுங்கல்ல துப்பாக்கி சூடு தொடர்பில் வெளியான புதிய தகவல்

அஹுங்கல்ல துப்பாக்கி சூடு தொடர்பில் வெளியான புதிய தகவல்

08 May 2024



அஹுங்கல்ல போகஹாபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கீர்த்தி சேனா அப்ரூ என்ற 56 வயதுடைய நபரே சம்பவத்தில் பலியானார்.


அஹுங்கல்ல போகஹபிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இன்று இரவு 7.45 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் தலையில் பலத்த காயங்களுடன் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.


துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


You may also like