brand logo
11 கோடி பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்

11 கோடி பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்

29 March 2024

 

11 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பல வாகனங்கள் மற்றும் சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

தடை செய்யப்பட்ட சொத்துக்களில் ஒரு லோறி, ஒரு வேன், இரண்டு முச்சக்கர வண்டிகள், 9 மோட்டார் சைக்கிள்கள், ஒரு பேக்ஹோ (ஒரு கோடி), மூன்று பல நாள் மீன்பிடி படகுகள், (3 கோடி), ஐந்து கோடிக்கு மேல் மதிப்புள்ள நிலம் மற்றும் வீடுகள் (3 வீடுகள், ஒரு கடை, 7 அடுக்குகள் ) ஆகியவை அடங்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.


You may also like