brand logo
லிந்துலையில் சிறுவர் அபிவிருத்தி நிலையம் தீக்கிரை

லிந்துலையில் சிறுவர் அபிவிருத்தி நிலையம் தீக்கிரை

16 April 2024




லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தை தோட்ட பிரிவில் தீப் பரவல் சம்பவம் ஒன்று (16) இன்று அதி காலை 02 மணியலவில் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.



 கல்கந்தை தோட்டத்தில் இயங்கிய வரும் பிள்ளைகள் அபிவிருத்தி நிலையத்தில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.


மேலும் இந்த தீ பிடிப்பு சம்பவம் மின்சார ஒழுக்கு காரணமாகவா,அல்லது யாரேனும் தீ வைத்துள்ளனரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை செய்து வருகின்றனர்.


அதேநேரத்தில் குறித்த பிள்ளைகள் அபிவிருத்தி நிலையம் மக்கள் குடியிறுப்பு பகுதிக்கு அருகில் காணப்படுகிறது.


தீ பிடிப்பு இடம்பெற்ற சமயத்தில் பாரிய வெளிச்சமும் புகை நாற்றமும் வருவதை உணர்ந்த அருகில் வசிக்கும் மக்கள் வீட்டு விட்டு வெளியில் பதறி கொண்டு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கின்றனர்.


அதேநேரத்தில் இந்த தீ பிடிப்பு சம்பவத்தினால் பிள்ளைகள் அபிவிருத்தி நிலையத்தின் கூரை பகுதி பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப கல்வி கற்கும் சிறார்களின் புத்தகங்கள்,உபகரணங்கள் பல தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


-ஆ.ரமேஸ்-



You may also like