கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
28 March 2024 | K.Yoshiya
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
28 March 2024 | K.Yoshiya
லுனுகம்வெஹெர திவார கிராமத்தில் உள்ள கடை ஒன்றுக்கு அருகில் இன்று காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
லுணுகம்வெஹர பிரதேசத்தைச் சேர்ந்த இப்பா என அழைக்கப்படும் கலும் துஷார என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இக்கொலை இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் வசித்த பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சிறிது காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.