brand logo
இஸ்ரேலியத் தாக்குதலில் ஹிஜ்புல்லா போராளிகள் மூவர் உயிரிழப்பு

இஸ்ரேலியத் தாக்குதலில் ஹிஜ்புல்லா போராளிகள் மூவர் உயிரிழப்பு

17 April 2024 | Mahendran Dinush Khan

லெபனானின் குவார் தவுனைன் பகுதியில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில், மேற்கு பகுதியை சேர்ந்த ரத்வான் படைகளின் ரொக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவுகளின் தளபதி முகமது உசைன் ஷாஹவுரி உயிரிழந்தனர். 


இதேபோன்று, இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹிஜ்புல்லா அமைப்பின் ரொக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவை சேர்ந்த மஹ்மூத் இப்ராகிம் பத்லல்லா என்பவரும் உயிரிழந்தார். லெபனானின் தெற்கு பகுதியில் நடந்த தாக்குதலில், லெபனானின் எயின் ஈபெல் பகுதியில் கடலோர பிரிவை சேர்ந்த தளபதியான இஸ்மாயில் யூசெப் பாஜ் என்பவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 போராளிகளின் உயிரிழப்பை ஹிஜ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது.


You may also like