brand logo
சிவனொளிபாதமலைக்கு சென்ற இந்தியர் பள்ளத்தில் விழுந்து படுகாயம்

சிவனொளிபாதமலைக்கு சென்ற இந்தியர் பள்ளத்தில் விழுந்து படுகாயம்

29 March 2024

 

சிவனொளிபாதமலைக்கான வீதியின் எஹலகனுவ பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளார்.

 

இந்திய பிரஜையான குறித்த நபர் அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

இந்தியாவின் மும்பையில் வசிக்கும் பாரத் சந்திரதாஸ் என்ற 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

 

காயமடைந்த நபர் இன்று (29) அதிகாலை 4.45 மணியளவில் இரத்தினபுரி - சிவனொளிபாதமலை வீதியின் ஊடாக சிவனொளிபாதமலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கினார்.

 

இதன்படி, உடனடியாக செயற்பட்ட சிவனொளிபாதமலை பொலிஸ் அதிகாரிகளால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு அறியப்படுத்தியதை தொடர்ந்து மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பள்ளத்தில் வீழ்ந்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பில் நல்லதண்ணிய பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு, காயமடைந்தவருடன் வந்த நபர்கள் நல்லதண்ணியவிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டன.


You may also like