தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
19 April 2024
தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
19 April 2024
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் ஆணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (18) இரவு வீட்டில் பின்புறத்தில் உள்ள குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பெருமாள் வடிவேல் (75 வயது) என தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நானுஓயா நிருபர்