brand logo
 சிரியாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 42 பேர் உயிரிழப்பு

சிரியாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 42 பேர் உயிரிழப்பு

29 March 2024

இஸ்ரேலிய போர் விமானங்கள் சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் தாக்குதல் நடத்தியதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.


குறித்த தாக்குதலில் 42 பேர் பலியாகியிருக்கலாம் என போர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பலர் சிரிய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.


பிரிட்டனை மையமாக கொண்டுள்ள சிரியாவின் மனிதநேய அமைப்பு, லெபனானை சேர்ந்த ஈரானிய ஆயுதக் குழு ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் வான்வழியாக தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இதில் 36 சிரிய வீரர்கள், 6 ஹிஸ்புல்லா போராளிகள் பலியானதாகவும் 12க்கும் அதிகமான மக்கள் காயமுற்றதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


You may also like