brand logo
இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

19 April 2024

 

 

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது

 

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

அதன்படி, பாராளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழ்நாடு, அருணாச்சலபிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், அந்தமான் - நிகோபார், காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி என 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து சென்றனர். தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் கடந்த தேர்தலைவிட வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதிகளில் கடந்த தேர்தலைவிட வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது.

 


You may also like