9 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
16 April 2024 | k.yoshiya
9 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
16 April 2024 | k.yoshiya
கம்பளை, அம்பகமுவ வீதியில் கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்து ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் கொழும்பு 07 பகுதியை சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் நேற்று (15) கொழும்பில் இருந்து கம்பளையில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது தந்தையுடன் சென்றிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.