brand logo
சர்வதேச விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம் வென்று கொடுத்த நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

சர்வதேச விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம் வென்று கொடுத்த நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

19 April 2024

 

 

யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் சிறந்த விளையாட்டு வீரரும் சர்வதேச விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றி இலங்கைக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதங்கங்களையும் பெற்றுக் கொடுத்தவருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 90 வயதில் நேற்று 18/04/2024 வியாழக்கிழமை அமெரிக்காவில் காலமானார்.

 

உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் விழாவில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற சிறப்பும் அவருக்கு உள்ளது. மூன்று ஆசியப் போட்டிகளில் இலங்கைக்காக இவர் விளையாடினார்.


You may also like