brand logo
இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது

09 May 2024

 

கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு அதிகாரிகள் உட்பட மூவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You may also like