brand logo
இன்றைய போட்டியில் சாதனை படைக்கவுள்ள ரிஷப் பண்ட்

இன்றைய போட்டியில் சாதனை படைக்கவுள்ள ரிஷப் பண்ட்

28 March 2024 | Mahendran Dinush khan

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட் கடந்த 2016ஆம் ஆண்டு டில்லி கெப்பிட்டல்ஸ் அணியில் அறிமுகமானார்.


ராஜஸ்தான் ராயல்ஸ்- டில்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் ரிஷப் பண்ட் விளையாடுவதன்மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 100ஆவது போட்டியில் விளையாட இருக்கிறார்.


மேலும், டில்லி அணிக்காக 100ஆவது போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையையும் படைக்கவுள்ளார். ரிஷப் பண்ட் 99 போட்டிகளில் விளையாடி 2,856 ஓட்டங்கள் அடித்துள்ளார். சராசரி 34.40 ஆகும். ஸ்டிரைக் ரேட் 147.90 ஆகும். 99 இன்னிங்சில் 15 அரைசதம், ஒரு சதம் விளாசியுள்ளார்.


ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்கள் அடித்தது அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். டேவிட் வார்னர் டில்லி அணிக்காக 2,433 ஓட்டங்கள் அடித்துள்ளார். சேவாக் 2,382 ஓட்டங்கள் அடித்துள்ளார். 2016இல் 10 போட்டிகளில் 198 ஓட்டங்கள் மட்டுமே அடித்திருந்தார். 2017இல் 14 போட்டிகளில் 366 ஓட்டங்கள் அடித்துள்ளார். 2018 சீசன் அவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. அதில் 14 போட்டிகளில் 684 ஓட்டங்கள் குவித்தார். சராசரி 52.62 ஆகும். ஸ்டிரைக் ரேட் 173.6 ஆகும்.


You may also like