முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை
29 March 2024
முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை
29 March 2024
லுணுகம்வெஹர, பஞ்சி அப்புஜந்துர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 31 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (28) காலை உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் லுனுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.