அமைச்சர் டக்ளஸ் தலைமையில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
28 March 2024
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
28 March 2024
யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இன்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது யாழ் மாவட்டத்தில் செயற்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூடலடத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான பி.எச்.எம்.சாள்ஸ், வடக்குமாகாண அவைத் தலைவர் சி.விகே.சிவஞானம், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், செல்வராசா கஜேந்திரன், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
பிரபாகரன் டிலக்சன்