brand logo
காதலியையும் காதலியின் தாயாரையும் தாக்கிவிட்டு இளைஞன் தற்கொலை

காதலியையும் காதலியின் தாயாரையும் தாக்கிவிட்டு இளைஞன் தற்கொலை

16 April 2024 | k.yoshiya

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கி விட்டு சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமென்று இளவாலை பனிப்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வசித்து வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் இன்று அதிகாலை 4.00 மணியளவில் காதலியின் வீட்டிற்குள் நுழைந்து குறித்த யுவதி மீதும் அவரது தாயார் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று வெற்றுக் காணியில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.


இந்நிலையில், யுவதியும் யுவதியின் தாயாரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You may also like