கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 300 பேர் அடையாளம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களில் 21 பேர் சிறைக்கைதிகள் என்பதோடு, ஏனைய அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 30,375ஆக அதிகரித்துள்ளது.