brand logo
குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

28 January 2023 | T.Yuwaraj

 

நானுஓயா எடிம்ரோ தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், பெண் தொழிலாளர்கள் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இன்று (28) முற்பகல் 11.20 மணியளவில், தேயிலை செடிக்கு அடியில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூடு கலைந்து குறித்த தொழிலாளர்களை கொட்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

(நானுஓயா நிருபர்)


You may also like