வில்பத்து தேசிய பூங்காவின் நுழைவாயிலுக்கும், கலா ஓயாவிற்கும் குறுக்கே தொங்கு பாலம்
வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழை வாயிலுக்கும், கலா ஓயா விற்கும் குறுக்கே தொங்கு பாலம் அமைப்பதற்கான அடிக்கல் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க நாட்டினார்.
குறித்த நிகழ்வு நேற்று புதன்கிழமை (15) மாலை இடம்பெற்றது. ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டத்தின் அனுசரணையில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த பாலமானது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், வில்பத்து தேசிய பூங்காவிற்கு இலகுவாக செல்லக்கூடிய வகையிலும் குறித்த தொங்கு பாலம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.