வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் மீண்டும் தோல்வி
தமிழ்தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ச.தணிகாசலம் தலைமையில் இன்று (07) இடம்பெற்றது.
இந்நிலையில், வரவு செலவுதி திட்டத்திற்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணி, பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியமக்கள் முண்ணனி, சுயேட்சை குழு ஆகியவற்றை சேர்ந்த 17 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த 8 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்திருந்தனர். இதனால் 9 மேலதிக வாக்குகளால் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்தது.
கடந்தமாதம் இடம்பெற்ற அமர்வில் 2022 ஆம் ஆண்டிறக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில் அது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.