வடக்கு மாகாண பாடசாலைகளில் நாளை விசேட கற்றல் நடவடிக்கைகள்
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நாளை சனிக்கிழமையும் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுமென்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினத்துக்கு பதிலாக பாடசாலைகள் நாளைய தினம் இடம்பெறும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
(யாழ் நிருபர்)