ரணில் விக்ரமசிங்கவுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நகர சபையின் உறுப்பினர் கே.ஜி தம்மிக சந்திரரத்னவை கட்சியில் இருந்தும் நகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்த தீர்மானத்தை ஏப்ரல் 12ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கிய சில உறுப்பினர்களுக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.