மேலதிக வகுப்புக்கள் நடத்துவதற்கு அனுமதி இல்லை- கல்வியமைச்சர்
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் இன்று தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என்றும் கல்வியமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பாடசாலை மாணவர்களுக்கான சித்திரை விடுமுறை தொடர்பில் ஏற்கனவே தீர்மானித்ததைப் போன்று விடுமுறை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.