மன்னார்-கோந்தைபிட்டி கடற்கரை பகுதியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோந்தைபிட்டி கடற்கரை பகுதியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை மீட்கப்பட்ட சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிக்க | புத்தளத்தில் வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
குறித்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமையச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளுக்காகச் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.