நாவற்குளம் பகுதியில் கைக்குண்டு மீட்பு
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ஓமந்தை நாவற்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியில், அதன் உரிமையாளர் துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இது குறித்து ஓமந்தை பொலிஸில் காணி உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த கைக்குண்டு மீட்டு அதனை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.