நாடு திரும்பினார் பிரதமர்
பங்களாதேஷ் நாட்டுக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றிரவு நாடு திரும்பினார்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் இன்றிரவு பிரதமர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
பங்களாதேஷ் பிரதமரின அழைப்பின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.