கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 317 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 512,798ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.