குழந்தைகள் வியாபாரம் அம்பலம்- பொலிஸாரின் வலையில் சிக்கிய சந்தேகநபர்
கர்ப்பிணி பெண்களை சில ஒப்பந்தங்களுக்கு உற்படுத்தி அவர்களுடைய குழந்தைகளை விற்பனை செய்யும் மோசடி வியாபாரம் ஒன்று தொடர்பில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் நீண்ட விசாரணையின் பின்னர் குறித்த மோசடியில் ஈடுபட்ட 47 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (21) மாத்தளை, உக்குவெல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இணையத்தின் ஊடாக விளம்பர காணொளி ஒன்றை தயாரித்து குறித்த நபர்கள் இந்த மோசடியை மொரட்டுவ பகுதியில் இரண்டு இடங்களில் நடத்திச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.