கரையொதுங்கும் சடலங்கள் – விசாரணைகள் ஆரம்பம்
வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாய் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
கடந்த 27ஆம் திகதி வடமராட்சி கிழக்கு மணல்காட்டிலும், வல்வெட்டித்துறை பகுதியில் சடலங்கள் கரை ஒதுங்கியிருந்த நிலையில் 30 ஆம் திகதி வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஒரு சடலம் கரை ஒதுங்கியிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் வடமராட்சி சக்கோட்டைப் பகுதியில் பிற்பகல் 2:30 மணி அளவில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியிருந்தது.
இந்நிலையில் இன்று மேலுமொரு சடலம் வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாயிலும் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு சடலங்கள் கரை ஒதுங்குவதனால் மக்கள் மத்தியில் பலத்த அச்ச நிலை தோன்றியுள்ளன.