கனேடிய அமைச்சரவையில் தமிழகப் பெண்
கனேடிய அமைச்சரவையில் தமிழ்நாட்டின் வேலூர் பகுதியை சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் இடம்பிடித்துள்ளார்.
கனேடிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் 3 சீக்கியர்களை பிரதமர் ஜஸ்டின் ரூடோ இணைத்திருந்தாலும் முதன்முறையாக தமிழகத்தை சேர்ந்த இந்து பூர்வீகத்தை கொண்ட அனிதா ஆனந்த்துக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
அனிதா ஆனந்த் ஒன்டாரியா மாகாணத்தில் ஓக்வில்லே தொகுதியில் இருந்து லிபரல் கட்சி சார்பாக கனடா நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.