எரிவாயு கலவை குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
எரிவாயு கசிவு மற்றும் வெடிப்புகளுக்கு எரிவாயு கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என்று சில தரப்பினர் கருத்து தெரிவித்தாலும், லிட்ரோ தனது நிறுவனம் எரிவாயு கலவையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலைமை தொடர்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டனர்.
தற்போது சந்தையில் கிடைக்கும் சிலிண்டர்களில் எரிவாயு கலவை மாற்றப்படவில்லை என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.