உணவு பொதியில் பல்லி – மட்டக்களப்பில் சம்பவம் (Video)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் இயங்கி வரும் சிற்றுண்டிசாலையில் இன்று பகல் கொள்வனவு செய்யப்பட்ட மீன் உணவு பொதியில் இறந்த நிலையில் பல்லியொன்று இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைக்க சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் நாளை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
வைத்தியசாலையின் இரண்டாம் விடுதியில் சிகிச்சை பெறும் கல்முனையை சேர்ந்த நோயாளி ஒருவருக்கு உதவியாக இருந்த ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்ட பகலுணவிலேயே பல்லி காணப்பட்டுள்ளது .