இலங்கை அணியுடனான போட்டியில் இங்கிலாந்து வெற்றி
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் 29ஆவது போட்டியாக இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக வனிந்து ஹசரங்க 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜோர்தான், ரஷிட், மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் ஊடாக இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதோடு, இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.