இன்றும் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 1,881 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4,221ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440,302ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.